பத்து மணி நேரத்தில் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க துரித நடவடிக்கையில் இறங்குகிறார் சிபிராஜ்.
மகளை காணவில்லை என்று போலீசில் புகார் தருகிறார் பெண்ணின் தாய்.அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் சிபிராஜ் வாக்கி டாக்கி மூலம் சக போலீஸ் டீமை அலர்ட் செய்து ஆங்காங்கே வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்கிறார். பெண் எப்படி காணாமல் போயிருப்பார் என்று படிப்படியாக நகர்வுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தி செல்கிறார்.இந்த வேலையில் பல அதிர்ச்சி யான தகவல்கள் வெளியாகின்றன யார் அந்த பெண் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடிந்ததா,எதர்க்காக அந்த பெண்ணை கடத்தினார்கள் அதற்குப் பின்னால் என்ன மர்மம் அடங்கி இருக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
சிபி சத்யராஜ் காஸ்ட்ரோ என்ற கதாபாத்திரத்தில் அவர் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
ஏனைய கதாபாத்திரங்களான கஜராஜ், ஜீவா ரவி,ராஜ் ஐயப்பா,முருகதாஸ், திலீபன்,தங்கதுரை,சரவண சுப்பையா, சருமிஷா,நிரஞ்சனா ஆகியோர் அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
கே எஸ் சுந்தரமூர்த்தி இசையும்,ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவும் கதைக்கு மிகப்பெரிய பலம்.
எதிர்பார்க்காத டிவிஸ்ட்டுகளை வைத்து படத்தின் திரைக் கதையை நேர்த்தியாக கையாண்டு இருக்கும் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
10 ஹவர்ஸ் நம்பகத்தன்மையான கிரைம் த்ரில்லர்.