‘‘நூறு சாமி’ ’ விமர்சனம்
ஸ்வாசிகா,கணவரை இழந்தவர் தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். மறுமணம் செய்ய ஆசைப்படும் ஸ்வாசிகா,தனது எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விடுகிறார்.
சில வருடம் கடந்த நிலையில் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.அவரது முடிவுக்கு அவரது இளைய சகோதரர் சக்தி ஆதரவு தெரிவிக்க,இரண்டு மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள்.இதற்கு சொந்தமும்,ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.இறுதியில் கருணாஸிடம் இருந்து ஸ்வாசிகா உயிர் பிழைத்தாரா இல்லையா மகன்கள் ஊர் எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
செல்வி கதாபாத்த...









