தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது
*தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது*
2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறோம்.
தமிழக மக்களுக்கென பிரத்யேகமாக தமிழ்நாட்டில் உருவெடுக்கும் முதல் ஓ.டி.டியாக,
புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசக்காட்சிகள் இவை எதுவும் இடம்பெறாத குடும்பங்களுக்கான ஓ.டி.டி.யாக,
தொடங்கும் முதல் நாளிலேயே, புத்தம் புதிதாய் 5 வெப் சீரிஸ்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இடம்பெறும் ஓ.டி.டி.யாக - பிளாக்ஷீப் நிறுவனத்தின் – BS Value இருக்கப்போகிறது.
நிகழ் ஆண்டில் மட்டும் 30 க...









