வேலுபிரபாகரன் அறிவுமிக்க ஆசான், நான் மக்கு மாணவி – கஸ்தூரி
"முடிவில்லா புன்னகை" படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இயக்குனர் வேலுபிரபாகரன் கூறுகையில்,
"இப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது நான் எதிர்பார்த்ததைவிட நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ‘கவலை’ என்கிற பாடல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால், கருப்பர்கள் மண்ணில் கருப்பாகஒரு பெண்ணைப் பார்த்து பயப்படுவது என்பது போன்ற விஷயங்கள் வேடிக்கையாக இருக்கிறது. ரத்னகுமாரைப் பார்க்கும்போது, கிழக்குச் சீமையிலே படம் புத்திசாலித்தனமாக திரைக்கதைஅமைப்பாளர்கள் மலையாத்தில் தமிழில் பஞ்சு கமர்சியலாக படமெடுப்பார்.
ஆனால், எம்.டி.வாசுதேவநாயர் மாதிரி இலக்கிய நடையில் எழுதக் கூடியவர்கள் தமிழில் இல்லை. எழுத்தாளர்கள்இல்லாத சினிமா என்றிருக்கையில், ‘கிழக்குச் சீமையிலே’ பார்த்தேன். மண் மணம் மாறாமல் அவருடைய எழுத்து இருந்தது. அ...









