சாருகேசி விமர்சனம்
ஒய்.ஜி. மகேந்திரான் உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வான் சங்கீதமே உலகம் என்று வாழ்பவர்.ஆனால் காலப்போக்கில் அவருக்கு அல்சைமர் நோய் தாக்கத் தொடங்குகிறது.தான் பாடிய ராகங்கள், தனது குடும்பத்தினர், ஏன் தனது சொந்த அடையாளம் வரை அனைத்தையும் அவர் மெல்ல மெல்ல மறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் அந்த நிமிடங்கள் பார்ப்பவர் நெஞ்சை உலுக்குமாறு அமைந்துள்ளது.இதற்கு நடுவில் அவருக்கும் அவரது மகன் ராஜ் ஐயப்பாவுக்கும் இடையே பெரும் தலைமுறை இடைவெளி மற்றும் ஈகோ மோதல்கள் நிலவுகின்றன.மகன் திடீரென ரம்யா பாண்டியனை திருமணம் செய்து கொள்வதால் அவரது குடும்பத்தில் பெரிய பிளவை ஏற்படுத்துகிறது.இதனால் அவதிப்படும் அவர்,தனது பொறுப்பற்ற மகனின் வாழ்க்கை முறை மற்றும் குடும்பச் சூழலை எப்படி சமாளிக்க முடியாமல் திணருகிறார். இந்த எமோஷனல் நிறைந்த நேரத்தில் சத்யராஜ் கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளாக இல்லாமல், அன்பு மற்றும் வழிக...









